உலகிலேயே இந்தியா பெருஞ்சீரக விதைகளை ஏற்றுமதி செய்வதில் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. ஏனெனில் இந்த பெருஞ்சீரக விதைகளின் பயன்கள் ஏராளம். பல்வேறு தரப்பட்ட மக்களும் இதை பயன்படுத்தி வருகிறார்கள். பொதுவாக இந்திய மக்கள் இதை உணவுகளில் பெரும்பாலும் பயன்படுத்தி வருகிறார்கள். அதே மாதிரி சாப்பிட்ட பிறகு செரிமானத்திற்காகவும் இதை பயன்படுத்தி வருகின்றனர். பெருஞ்சீரக விதைகளில் நிறைய தாதுக்கள் உள்ளன. இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதற்கும் நமது உடலுக்குள் தண்ணீரைத் தக்கவைத்துக்கொள்வதற்கும் இது உதவுகிறது.
பெருஞ்சீரகம் விதைகள் லேசான இனிப்பு சுவையுடன் வெளிப்புறத்தில் ஒரு முறுமுறுப்பான
அமைப்பைக் கொண்டு இருக்கும். இதன் நறுமணத்தால் வாய் புத்துணர்ச்சிக்காக கூட பயன்படுத்துகின்றனர். இது பார்ப்பதற்கு சோம்பு விதைகள் போன்று இருக்கும். வைட்டமின் கே, வைட்டமின் ஈ, மாங்கனீசு, தாமிரம், துத்தநாகம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற பல ஊட்டச்சத்துக்களைக் கண்டுள்ளன. மேலும் வைட்டமின் சி யும் அதிகளவில் காணப்படுகிறது. விட்டமின் சி ஒரு ஆன்டி ஆக்ஸிடன்டாகவும் செயல்படுகிறது. இது வெயில் , புகை அல்லது மாசுபாட்டால் ஏற்படும் எந்தவொரு சேதங்களிலிருந்தும் உங்கள் சருமத்தைப் பாதுகாக்கும். இப்படி ஏகப்பட்ட நன்மைகளைத் தரும் பெருஞ்சீரக விதைகளை பற்றி காண்போம்.
முழு வீடியோ பதிவு கிழே உள்ளது .