ஆண்களாக இருந்தாலும், பெண்களாக இருந்தாலும் தங்களை அழகாக காட்டிக் கொள்வதில் கட்டாயமாக ஆர்வம் காட்டுவார்கள். முகம் அழகாக இருக்க வேண்டும் என்பதற்காக, நாம் எத்தனையோ அழகு சாதன பொருட்களை பயன்படுத்தி வருகின்றோம். ஆனால் அந்த அழகெல்லாம் இயற்கையாக, நிரந்தரமாக நம்மிடமே இருக்குமா? கட்டாயமாக இருக்காது. ஒரு சில மணி நேரத்திற்கு பின்பு வேஷம் கலைந்து போகத்தானே செய்யும். இயற்கையாகவே நம்மை அழகாக மாற்றிக்கொள்ள, இயற்கையான முறையில் என்ன வழியை பின்பற்றலாம்! சுலபமான, ஆரோக்கியமான, இயற்கையான ஒரு வழியைத்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். உங்களை அழகாக மாற்றப்போகும் குறிப்புக்கு செல்வோமா! இந்த பதிவை பற்றிய முழு விவரமும், வீடியோ பதிவும் அதில் அடங்கி உள்ள குறிப்புகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
அதற்கு முன்பாக கற்றாழைக்கு உள்ள குண நலன்களைப் பற்றி பார்த்துவிடுவோம். சுற்றுப்புற சூழல், மாசு காரணமாக அதிகப்படியான கிருமிகள் வந்து, நம்முடைய முகத்தில் படிந்து விடுகிறது. தூசுகள், வண்டியில் இருந்து வெளியேறும் புகை இப்படிப்பட்ட பல வகையான மாசுகளும் நம் சருமத்தை பாதிக்கும் என்பது மருத்துவர்களின் ஆலோசனை.
இப்படி இருக்க இயற்கையாகவே, முகத்தில் இருக்கும் மாசுக்களை நீக்கக்கூடிய சக்தியானது இந்த கற்றாழைக்கு உள்ளது. முகம் மாநிறமாக இருந்தாலும், அதை வெள்ளையாக மாற்றும் சக்தியும் இந்த கற்றாழைக்கு உள்ளது. கரும்புள்ளிகளை நீக்கும் சக்தி இந்த கற்றாழைக்கு உள்ளது. கழுத்தில் உள்ள கருமை நிறத்தை போக்கும் சக்தியும் இந்த கற்றாழைக்கு உள்ளது.
முதலில் உங்களது முகத்தை சாதாரண தண்ணீரில், சுத்தமாக கழுவி துடைத்துக் கொள்ளுங்கள். அதன் பின்பு கற்றாழை செடியிலிருந்து, சிறிது துண்டு கற்றாழையை உடைத்து எடுத்துக்கொண்டு, அதில் இருக்கும் தோலை மட்டும் நீக்கிவிட்டு, உள்ளே இருக்கும் ஜெல்லில் சிறிதளவு சர்க்கரை தொட்டு உங்களது முகத்தில் லேசாக ஸ்கிரப் செய்ய வேண்டும். அழுத்தமாகப் செய்து விடக்கூடாது. சர்க்கரையின் மூலம் முகத்தில் கீரல் விழுவதற்கு வாய்ப்பு உள்ளது. வெறும் 3 நிமிடம் மட்டும் உங்கள் கைகளை வைத்து லேசாக ஸ்கரப் செய்தால் போதும்.
முழு வீடியோ பதிவு கிழே உள்ளது .